சன் டிவியில் சில சீரியல்கள் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கிக் கொண்டே வருகிறது. அதனால் அந்த சீரியல்களை எல்லாம் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல்களை ஒவ்வொன்றாக இறக்கலாம் என சன் டிவி முடிவு பண்ணி விட்டது. அந்த வகையில் 1100 எபிசோடு தாண்டிய ஒரு சீரியலை அடுத்த வாரத்துக்குள்ளே முடிக்கலாம் என்று இறுதி அத்தியாயத்தின் சூட்டிங் எடுத்து விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக், சுந்தரி மற்றும் வெற்றிக்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனைகளை கொடுக்கப் போகிறார் என்று தெரியாமல் புரியாத புதிராக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது இந்த நாடகத்திற்கான கிளைமாக்ஸ் சூட்டிங் எடுத்து விட்டார்கள். கடைசியில் கார்த்திக் திருந்துவது போல் வரலாம் அல்லது அணுவை தேடி நானும் போகிறேன் என்று தவறான முடிவு கூட எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
பிறகு இந்த சீரியலுக்கு அடுத்து தினமும் ஏழு மணிக்கு ஒளிபரப்பாக தயாராகி இருப்பது சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தோழியாக நடித்த ரெஜினா என்கிற ஜீவிதா நடிப்பில் உருவாகியுள்ள ரஞ்சினி சீரியல் வரப்போகிறது. இந்த நாடகம் முழுக்க முழுக்க நட்பு ரீதியாக இருக்கப் போகிறது.
இதில் இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் ஹீரோ ஆதியின் நண்பராக நடித்த கேசவன் கதாநாயகனாக கமிட் ஆகி இருக்கிறார். பிரைம் டைமில் ஒளிபரப்பாக போகும் இந்த நாடகமும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.