2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். சில நல்ல செய்திகளும் வரும். எனவே கேது கிரகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய ராசியை மாற்றிவிட்டார். இனி 2025-ம் ஆண்டு வரை கன்னி ராசியில் இருப்பார். இத்தகைய சூழலில் கேதுவின் சஞ்சாரம் சில ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கலாம். அத்தகைய ராசிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
மீனத்தில் கேது பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தில் கேது, அசுப கிரகமாக கருதப்படுகிறது. கேது கிரகமும் சனி கிரகத்தைப் போல மெதுவாகவே தன்னுடைய ராசியை மாற்றுகிறது. கேது ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கன்னி ராசிக்கு மாறிவிட்டது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, கேது கிரகம் எப்போதும் தலைகீழ் இயக்கத்தில் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டில், கேது தலைகீழாக நகர்ந்து சிம்மத்திற்கு மாறுகிறார். ஆனால் அதற்கு முன் கன்னி ராசியில் கேது கிரகம் இருப்பதால் சில ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களையே அளிக்கிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்களின் நிதி நிலை மேம்படும். உறவுகளில் இனிமை நிலைத்திருக்கும். மனைவியிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவார்கள். நீண்ட நாட்களாக முதலீடு செய்து வருபவர்களுக்கு பலன் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.