திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? – விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

130 0

சினிமாவில் கால் வைப்பது வேறு அரசியல் களத்தில் கால் வைப்பது வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பல அரசியல் நிகழ்வுகளை பேசி அதிரடி காட்டினார் விஜய். அதாவது, “200 தொகுதிகளை இறுமாப்புடன் வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சியால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என பல்வேறு விஷயங்களை பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “கூட்டணியில் தப்பு கணக்கு போடும் பழக்கம் திமுகவுக்கு இல்லை. அரசியலில் எந்த பிளஸும் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை. சினிமாவில் வேண்டுமென்றால் பிளஸ் மைனஸ் ஆகும்.

நாங்கள் மன்னர் ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறது. வாரிசு என உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லிஅ.

விஜய் சேற்றில் காலை வைத்தால்தான் தெரியும். சினிமாவில் காலை வைப்பது வேறு. சேற்றில் காலை வைப்பது வேறு. மழை, வெள்ள நிவாரணப்பணிகளில் சேற்றில் வெள்ளத்தோடு வெள்ளமாக நின்று பணியாற்றி வருகிறோம்.

இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் திருமாவளவனுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் துணிச்சலாக பேசக் கூடியவர் திருமாவளவன். வேங்கைவயல் விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அதுகுறித்து தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  வேங்கைவயல் விவகாரத்தில் எந்த அமைச்சரோ, எம்.எல்.ஏவோ தலையிடவில்லை” எனத் தெரிவித்தார்.

Related Post

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி அமைச்சர்.! டெல்டா மாவட்டத்தை தட்டி தூக்கிய ஸ்டாலின்

Posted by - January 21, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள்…

“சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு” முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்

Posted by - June 26, 2025 0
தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா? என…

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *