பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

157 0

பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு வேலை ஏதும் இல்லாததால், சும்மா ஊர் சுற்றிவந்துள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

ராகவேந்திரா அந்த மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பள்ளியில் படிக்கும் அந்த மாணவி அவரின் காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார். இதனால், ஆவேசமடைந்த ராகவேந்திரா, ஒரு பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்துக்கொண்டு அந்த மாணவி தனியாக இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.ஆனால், மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராகவேந்திரா திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். தீ உடல் முழுக்க பரவ மாணவி வலியால் கதறி துடித்துள்ளார். இவரின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.அப்போது மாணவி உடல் முழுக்க தீப் பற்றி எரிந்த நிலையில் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், ராகவேந்திராவின் உடையிலும் தீப்பற்றி அதன் காரணமாக அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

ந்த கொடூர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் ராகவேந்திராவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பலியான மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து ராகவேந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Post

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

Posted by - July 3, 2023 0
திருப்பதி: ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு…

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 50எம்பி கேமரா.. டால்பி அட்மாஸ்.. வருகிறது Moto போன்.. எந்த மாடல்?

Posted by - December 9, 2024 0
டிசம்பர் 10-ம் தேதி இந்தியாவில் மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த மோட்டோ ஜி35 5ஜி…

நீல நிற ஆதார் கார்டு பற்றி தெரியுமா? யாருக்கெல்லாம் இந்த அட்டை? முழு விவரம்!

Posted by - February 26, 2024 0
2018ஆம் ஆண்டில், UIDAI ஆனது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ‘பால் ஆதார்’ (Baal Aadhaar) அட்டையை வெளியிட்டது. ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால்…

மற்ற இன்டர்நெட் சேவைகளை பின்னுக்கு தள்ளப்போகும் ஜியோ ஏர் ஃபைபர்… சிறப்பம்சங்கள் என்ன?

Posted by - August 28, 2023 0
எண்ணற்ற இன்டர்நெட் யூசர்கள் ஜியோ ஃபைருக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். #jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #anantambani…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *