அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

136 0

வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போல வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒருவரின் பொருளாதார ரீதியான வரவு, செலவுகளுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியமான அங்கமாக வங்கி உள்ளது. வங்கிச் சேவையை நாட்டில் பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவே ஆகும்.

அக்கவுண்டை மாற்றாமலே வங்கியை மாற்றலாம்:

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் செயல்பாட்டையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறை ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது, பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

அதாவது, ஒரு வங்கியில் பயன்படுத்திய வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியே இந்த பேமென்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ் ஆகும். பொதுவாக, ஒருவரின் வங்கிக்கணக்கு எண்ணுடன் மியூச்சுவல் பண்ட், சம்பளகணக்கு, கடன் தவணை போன்ற பல்வேறு முக்கியமான விவரங்கள் தொடர்பில் இருக்கும். இதனால், வங்கிக்கணக்கை மாற்றும்போது அனைத்து சேவைகளிலும் புதுப்பிக்கும் சூழல் உண்டாகும்.

பலன்கள் என்னென்ன?

ஆனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கியை மாற்றிக்கொண்டாலும் வங்கிக்கணக்கு எண் மாறாது. அனைத்து பேமெண்ட் மேண்டேட்களும் தானாகவே மாறிவிடும். மேலும், இஎம்ஐ முறையும் மாறாமல் புதிய வங்கியில் இருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும். வங்கியின் சேவை பிடிக்காவில் வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதி எளிதாக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி இந்த முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. வங்கியில் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர்பு வைப்பு கணக்கு எண் ஆகிய கணக்குகள் உள்ளது. பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கே பயன்படுத்துவார்கள்.

வர்த்தகம் செய்பவர்கள், வியாபாரிகள் நடப்புக்கணக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த கணக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ள இந்த செயல்முறையானது எந்த வங்கிக்கணக்கு பயனாளர்களுக்கு? என்ற தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் சேமிப்பு வங்கிக் கணக்கு பயன்படுத்துபவர்களுக்கே இந்த சேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

BSNL போதும்டா சாமி.. இனி ரூ.18-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1 ஜிபி டேட்டா..

Posted by - December 10, 2024 0
பிஎஸ்என்எல் சிம் கார்டு கொடுங்க, உடனே 4ஜி சேவைக்கு மாத்துங்கனு ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் சொல்ல வைக்கும்படி அந்த நிறுவனத்தின் திட்டங்கள் இருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத…

ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு…

Posted by - February 29, 2024 0
ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு… ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன. இந்த கூட்டு…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *