கடனை அடைக்க கடன் கேட்கும் முகேஷ் அம்பானி…உலகளாவிய பணக்காரருக்கே இந்த நிலைமையா…?

205 0

Reliance Industries Seeking Big Loan – முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் மற்றும் உலகளாவிய அளவில் 100 ஆவது மிகப்பெரிய நிறுவனம் ஆக அறியப்படுகிறது, கிட்டதட்ட 3,47,362 பணியாளர்களை கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் பல தொழில்களை கையாண்டு வருகிறது, நிகழ் நிதி ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் 120 பில்லியன் USD வருமானத்தை ஈட்டி இருக்கிறது.

அதில் நிறுவனத்தின் நிகர இலாபம் மட்டும் கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கலாம் என கூறப்படுகிறது, அதே சமயத்தில் கடந்த செம்படம்பர் 2024 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் என்பதும் 39.60 பில்லியன் டாலர்களாக இருக்கிறது, இது வட்டியை சேர்க்காமல் என்னும் போது வட்டியை சேர்த்தால் இன்னும் கடன் தொகை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த கடன் தொகை நிறுவனத்தின் நிகர வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது, அதே சமயத்தில் நிகர இலாபத்தை விட 4 மடங்குகள் இருக்கிறது, இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது, அதாவது தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்து வருவதால், வங்கிகள் மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்து கடனை வசூலிக்க அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.

இதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும் என்பதால், ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகைகளையும் வங்கிகள் தற்போது துரத்தி வருகின்றன, இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் வருகின்ற முதல் காலாண்டின் கடன் நிலுவைத் தொகையை அடைக்க பிற வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து 25,500 கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம், கடன் பெறுவதற்கான முடிவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிகிறது.

” ரிலையன்ஸ் தொடர்ந்து இந்திய வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது “

Related Post

மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் ரூ.10 லட்சம்வரை கடனுதவி அறிவிப்பு!

Posted by - August 17, 2024 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…

புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்

Posted by - July 5, 2023 0
ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள். சிலருக்கு…

வரலாறு படைக்க தயாராகிறது “சந்திரயான்-3”: நிலவில் இன்று தரையிறங்குகிறது

Posted by - August 23, 2023 0
ஸ்ரீஹரிகோட்டா: உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய…

அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

Posted by - September 8, 2023 0
நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில்…

இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Posted by - September 10, 2025 0
சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *