அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

109 0

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், அதே பிரிவில் 4 ஆம் ஆண்டு படிக்கும் மாணவருடன் நட்புடன் பழகி வந்தார். இருவருமே பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு வெளியே சென்றனர். பின்னர், பல்கலைக்கழகம் திரும்பிய அவர்கள், வளாகத்திற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற இரண்டு பேர், கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கி விட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதனை வீடியோ எடுத்து, வெளியே கூறினால், சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நேற்றிரவு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை பிரிவான பி.என்.எஸ்.64 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியது.முதற்கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த அன்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்த மாணவ, மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த, உயர் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். மேலும் சென்னை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய கோவி. செழியன், தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் வெளி ஆட்கள் என்றும் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பவர் ஞானசேகரன் என்பதும், அவர் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சாலையோர பிரியாணி கடை நடத்திவரும் ஞானசேகரன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஞானசேகரன் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாக ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Post

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

அமுக்கிரா கிழங்கு.. ஊளைச்சதை முதல் நரம்பு தளர்ச்சிவரை நீக்கும் அமுக்கிரான் கிழங்கு பொடி.. செம மூலிகை

Posted by - January 9, 2024 0
சென்னை: நரம்புகளை பலப்படுத்துவது முதல் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டுவதுவரை பயன்படக்கூடியது அமுக்கிரா கிழங்கு.. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கிழங்குக்கெனவே தனி இடம் உள்ளது.…

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Posted by - January 26, 2024 0
அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ! சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில்…

”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

Posted by - January 6, 2025 0
இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *