மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கிவருகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.
இந்த நிலையில் நிகழ்வில் பேசிய விஜய், ’இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணதுக்கு காரணம். சமீபத்தில் ஒரு படத்தில் காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, பணம் இருந்தா புடுங்கிடுவானுங்க, படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது. அது என்னை பாதித்த வசனம். இது. நூற்றுக்கு நூறு உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளார்.