அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

213 0

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு எஃப்ஐஆர் இணையத்தில் வெளியான நிலையில், குற்றவாளி பாலியல் வன்கொடுமைக்கு உடன்பட வைத்தது எப்படி என பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றில் அவலம்!

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.

அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுவும் காதலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரை விரட்டிவிட்டு ஞானசேகரன் என்பவர் இத்தகைய கோர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஞானசேகரன் கைது; திமுக நிர்வாகியா?

மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நிற்கும் புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலின் அருகில் நிற்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

இச்சைக்கு இணங்காவிட்டால்…

அதில், நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து, ’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.

போதாததற்கு ’’மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.

மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி யாருமே புகார் அளிக்கக் கூடாதா?

அதே நேரத்தில், மாணவியின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலத்தில் இனி யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Post

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

Posted by - February 14, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக…

ஆட்சி மாற்றம் ஏற்படும்… தங்கம் விலை உச்சத்தை தொடும்… புதிய நோய் பரவும்… பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்,….

Posted by - April 15, 2025 0
மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும்…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

Posted by - April 5, 2023 0
#Aavin Milk : ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *