“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

143 0

கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த அதிமுக நிர்வாகி காட்டிக் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,  கொலையாளிகளை விட்டு விட்டு மற்றவர்களை கைது செய்து வழக்கை திசை திருப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜகபர் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில, இவர் மட்டும் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் தொழுகை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜகபர் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜகபர் அலியின் மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமயம் அருகே கல் குவாரி என்ற பெயரில் சிலர், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தடுக்கும் வகையில், தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர்கள், லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து விடுவதாக ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்ததாக, அவரின் மனைவி கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தனது புகாரில் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Post

நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

Posted by - June 26, 2025 0
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

15 இடங்களில் சதமடித்தது… மக்கள் கடும் அவதி…!

Posted by - May 18, 2023 0
சென்னையில் அதிகபட்சமாக மாதவரத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று 15 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக வேலூர்…

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *