உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

204 0

விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர்.

சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன். அங்கே என்னை வந்து பார்க்கலாம் என கோபத்தில் மேடையிலேயே மைக்கை தூக்கி வீசிவிட்டு அன்புமணி வெளியேறிய சம்பவம் பாமக தொண்டர்கள் மத்தியில் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். அப்போது ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் முகுந்தனௌக்கு பொறுப்பு வழங்க கூடாது என அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும். கட்சியில் வந்து 4 மாதம் ஆனவருக்கு என்ன அனுபவம் இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ”பாமகவை உருவாக்கியது நான் தான் இதனை. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அதுதான் நடக்கணும். ஏற்கவில்லை என்றால் விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளுங்கள்” என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய் அன்புமணி, பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் இருக்கிறது. என்னை சந்திக்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

மேடையிலேயே தந்தை மகன் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் இடையே குழப்பத்துக்கு காரணமான முகுந்தன் ராமதாஸின் பேரன் ஆவார். பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் ப.முகுந்தன். சகோதரி மகன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்ததால்தான் இந்த பிரச்சினை வெடித்துள்ளது. முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்தார். பின்னர் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்த பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பதவிக்கு ஆள் நியமிக்கப்படாமல் சும்மாகவே இருந்தது. அதற்கு முன்னதாக அன்புமணிதான் இளைஞரணித் தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் தலைவரானதும்தான் அந்த பதவி ஜி.கே. மணியின் மகனுக்கு சென்றது. அவரும் ராஜினாமா செய்யவும் தற்போது முகுந்தனுக்கு வழங்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ அருள் கூறுகையில் “ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இப்போது வெளிப்பட்டது சலசலப்புதான். இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாமக பொதுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது ”அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என திமுக அரசுக்கு கண்டனம். சாதிவாரி கணக்கெடுப்பை கட்டாயமாக்க சட்ட திருத்தம் தேவை. தமிழகத்தில் 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Post

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

“நான் இப்படி செய்வனோ..?” – ஜி.கே.மணி உருக்கம்

Posted by - May 17, 2025 0
45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக்…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

’DMK FILES’

Posted by - January 7, 2026 0
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *