’DMK FILES’

77 0

தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக தேர்தல்- அதிமுகவின் புதிய வியூகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கநெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதுஅதிலும் முன் கூட்டியே தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறதுஇதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதுதற்போது வரை 4 முனை போட்டி தமிழகத்தில் உறுதியாகியுள்ளதுஇதில் திமுக– அதிமுக இடையிலான போட்டியால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளதுஇதில் முதல்கட்டமாக திமுக அமைச்சர்கள் மீது அதிமுக– பாஜக கூட்டணி குறிவைத்துள்ளது திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேடி தேடி எடுத்துள்ளது அதிமுக தலைமைஅந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை தயார் செய்துள்ளது.

அமைச்சர்கள் மீதான புகார்- தேடி எடுக்கும் அதிமுக

நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்ரவியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான பட்டியலை வழங்கினார்இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்56 மாதங்களாக வெளிப்படை தன்மை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார்

ஆளுநரிடம் ஆதாரங்களை கொடுத்த இபிஎஸ்

அந்த வகையில் பின்வரும் துறைகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  ₹64,000 கோடி
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ராஜ் துறை  ₹60,000 கோடி
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  ₹60,000 கோடி
  • மின்சாரத் துறை  ₹55,000 கோடி
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  ₹50,000 கோடி
  • பதிவுத் துறை  ₹20,000 கோடி
  • நெடுஞ்சாலைத் துறை  ₹20,000 கோடி
  • நீர்வளத் துறை  ₹17,000 கோடி
  • பெருநகர சென்னை மாநகராட்சி  ₹10,000 கோடி
  • தொழில் துறை  ₹8,000 கோடி
  • பள்ளிக் கல்வித் துறை  ₹5,000 கோடி
  • சமூக நலத் துறை  ₹5,000 கோடி
  • வேளாண்மைத் துறை  ₹5,000 கோடி
  • சுகாதாரத் துறை  ₹4,000 கோடி
  • உயர்கல்வித் துறை  ₹1,500 கோடி
  • இந்து சமய அறநிலையத் துறை  ₹1,000 கோடி
  • ஆதிதிராவிடர் நலத்துறை  ₹1,000 கோடி
  • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  ₹750 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  ₹500 கோடி
  • சிறைத் துறை  ₹500 கோடி
  • சுற்றுலாத் துறை  ₹250 கோடி
  • பால்வள மேம்பாட்டுத் துறை  ₹250 கோடி

இந்த லட்சம் கோடி ஊழல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தவும்இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும்உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக முறைப்படி வலியுறுத்தியுள்ளது. “தமிழக மக்களுக்குத் தூய்மையான நிர்வாகம் கிடைக்க வேண்டும்பொதுப்பணத்தைப் பட்டப்பகலில் கொள்ளையடிப்பது தண்டிக்கப்படாமல் போகக்கூடாது,” என்று அதிமுக உறுதியுடன் தெரிவித்துள்ளது.

 இந்த பரபரப்பான நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர்திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேற்று ஆளுநரிடம் வழங்கிய புகார் மனுவை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய பைல்களுடன் இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக ஆதாரங்களுடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்திருந்தார்அந்த ஆதாரங்களை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறதுஇந்த புகார் மீது விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

Posted by - November 27, 2025 0
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - September 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

திமுகவுக்கு ஆதரவு… ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு! ஷாக்காகி பார்த்த விஜய்

Posted by - November 6, 2025 0
நமது தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *