“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

117 0

திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

அப்போது, “சேப்பாக்கத்தில் இந்த முறை வெற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தமுறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம்.” என்று கூறினார். அப்போது திமுக தொண்டர்கள் வேறு தொகுதி வேண்டாம் என்றும் சேப்பாக்கம் தொகுதியில் தொடர்ந்து நிற்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.தொடர்ந்து பேசிய உதயநிதி, திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் தெரிவித்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது உண்மையில் வருந்தத்தக்க சம்பவம் தான். ஆனால், அதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.” என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதிக்கப்பட்டபோதும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் துணை முதல்வர் குற்றஞ்சாட்டினார்.

Related Post

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - June 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

பொங்கல் பரிசு ரூ.1000… ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

Posted by - December 23, 2022 0
Ponga Gift | பொங்கல் தொகுப்பு உடன் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி…

“செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது கொடூர தாக்குதல்” – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Posted by - March 1, 2024 0
திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது கொடூர…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *