ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட் (SIM Card Deactivate) செய்யப்பட இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ரூ.20 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே டீ-ஆக்டிவேட்டில் இருந்து காப்பாற்றும். இந்த ஏர்டெல் சிம் கார்டு விதிகள் (Airtel SIM Card Rules) என்ன சொல்கிறது? ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் இப்போது என்ன செய்யலாம்?இந்த விதிகள் புதிதாக வந்தது, கிடையாது. டிராய் (TRAI) என்று சொல்லப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது அமல்படுத்தி விதிகளையே இப்போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு விளக்கி இருக்கிறது. இது டெலிகாம்டாக் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.ஏர்டெல் கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டில் 90 நாட்களாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால், இந்த விதிகளின்படி அந்த சிம் கார்டு டீஆக்டிவேட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். அந்த 90 நாட்களுக்கு மேல் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த அவகாசத்துக்குள் நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில் உங்களது சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய ஏர்டெல் நிறுவனத்துக்கு உரிமை இருக்கிறது. அதன்பிறகு உங்களது மொபைல் நம்பரும் வேறொரு கஸ்டமர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழங்க முடியும். இதை தடுத்து வைக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது, ரூ.20 டாக்டைம் உங்களுக்கு சிம் கார்டில் இருந்தால், அந்த 90 நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.
Related Post
உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி கிலோ ரூ.250-க்கு விற்பனை
நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் 1…
மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்
லே: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…
அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…
அபாரமான சாதனை…ரஜினி..கமல்..உதயநிதி.. அஜித்துக்கு குவியும் வாழ்த்து!
“இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து…
பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (183)
- இந்தியா (455)
- உலகம் (164)
- சினிமா (795)
- தமிழ்நாடு (1,075)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (205)
- பொழுதுபோக்கு (696)
- விளையாட்டு (78)