மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்

209 0

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.

இந்தியா மீது பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீது இந்தியாவும் தொடர்ந்து 3 நாள்களாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அதனை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்தன. மோதலை நிறுத்தி கொள்வதாக அறிவித்த பிறகும் கூட, ஜம்முவில் ட்ரோன்களை கொண்டு பாகிஸ்தான் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல்முறை அல்ல. வாஜ்பாய் காலத்தில் லாகூர் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில வாரங்களிலேயே கார்கில் போரை தன்னிச்சையாக தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்.

முதுகில் குத்திய ராணுவம்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

ஆனால், இஸ்ரேல், ரஷிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் முயற்சியை இந்தியா முறியடித்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, மோதலை நிறுத்தி கொள்வதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன. மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தை மீறி ஜம்முவில் நேற்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. பாகிஸ்தான் இப்படி நடந்து கொள்வது முதல் முறை அல்ல.

கார்கில் சொல்லும் பாடம்: 

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தொடர் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த 1999ஆம் ஆண்டு, இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், லாகூர் சென்று அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியான முறையில் தீர்வை எட்ட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு, லாகூர் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் பாகிஸ்தான் ராணுவம் கார்கில் போருக்கு ரகசியமாக தயாராகி வந்தது. பாகிஸ்தான் அரசாங்கத்தை மீறி, கார்கில் போரை தன்னிச்சையாக சில வாரங்களில் தொடங்கியது.

பாகிஸ்தான் அரசு டம்மியா? 

பாகிஸ்தானை பொறுத்தவரையில், அந்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை காட்டிலும் ராணுவமே அதிகாரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராணுவத்தை பாகிஸ்தான் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத சூழல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்தியாவில் ராணுவம், மத்திய உளவுத்துறை (Intelligence Bureau), ரா (Research and Analysis Wing) உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் இந்திய அரசின், மத்திய அமைச்சரவையின் முழு கட்டுபாட்டில் இயங்குகின்றன. ஆனால், பாகிஸ்தானில் அப்படி இல்லை. முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுத் துறையான ISI (Inter-Services Intelligence) முற்றிலும் சுயேட்சயாக செயல்படும் அமைப்பு. கருப்பு பணத்தில் இயங்கி வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, நடத்தி வருவது இது தான். இதை, பாகிஸ்தான் அரசால் மட்டும் இல்லை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு தலைவர்களில் கொலையில் அந்நாட்டு ராணுவம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. அந்நாட்டின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் தொடங்கி சுல்பிகர் அலி பூட்டோ, பெனாசிர் பூட்டோ வரை பல தலைவர்களின் கொலைக்கு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா?

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கும் சூழலில், இந்த மோதல் இதற்கு பின்னரும் தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படையே பதில் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இந்திய விமானப்படை வெளியிட்ட பதிவில், ஆபரேஷன் இன்னும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. இருப்பினும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, இந்த மோதல் இதற்கு பின்னரும் நீட்டிக்கப்படாது என்ற கருத்தே நிலவி வருகிறது.

 

Related Post

இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

Posted by - March 13, 2025 0
சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை…

திருட்டு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எருமை மாடு- ராஜஸ்தானில் ருசிகர சம்பவம்

Posted by - August 11, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிஷன்புரா-சரண்வாஸ் ஹால், ஹர்மதா பகுதியை சேர்ந்தவர் சரண்சிங் செராவத் (வயது 48). விவசாயியான இவர் எருமை மாடுகள் வளர்த்து…

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

Posted by - October 11, 2025 0
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார்…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *