சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல் வியூக வகுப்பாளராக ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி இருக்கும் நிலையில், இந்திய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற பிரசாந்த் கிஷோரை , தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். இது, ஆதவ் ஆர்ஜூனாவின் ஏற்பாடுதான் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. பிரசாத் கிசோரை, திடீரென விஜய் சந்திக்க காரணம் என்ன? ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலைகளா? ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ விவகாரம் காரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன நிலையில், அதுகுறித்து பார்ப்போம்.
கட்சிகளை வலுப்படுத்தும் விஜய்:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கான தீவிர வேலைகளில் இறங்க ஆரம்பித்திவிட்டார், தவெக தலைவர் விஜய். கட்சிகளை வலுப்படுத்தும் வகையில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளை ,120 மாவட்டங்களாக பிரித்து, அதற்கான மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, விசிக கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் பதவியையும் வழங்கினார்.
அப்போதே கட்சியில் சில சலசலப்பு ஏற்பட்டது, ஏற்கனவே தவெக கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கும் நிலையில், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக அமைப்பை வைத்து நடத்தும் ஆதவ் அர்ஜூனாவுக்கு, தவெகவில் பொறுப்பு கொடுத்தது ஏன், ஜான் ஆரோக்கியசாமிக்கு ஏதேனும் இடையூறை ஏற்படுத்துமா என்றும் கேள்விகள் எழுந்தன.