சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

221 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது.

அரசாங்கத்தை பெரிதும் புகழ்ந்த வார்த்தைகளையே ஆளுநர் தவிர்த்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் விளக்கமளித்துள்ளது. மேலும் அவை விதிகளை மீறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து மற்றும் கூடுதல் வார்த்தைகள் சேர்த்தது குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது அவை மரபை மீறிய செயல் என்றும், ஆளுநர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்குவது என்பது தீவிர விவாத பொருள் எனவும் தெரிவித்துள்ளது. மரபு மீறி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட பிழை என்றும் தொழில் முதலீடு குறித்த விவரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் தவிர்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்தி தாள்களில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் நாள்தோறும் வருகின்றன. தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்பது எதார்த்தம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டது மாநிலத்தின் முயற்சியால் மட்டுமே நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Post

திமுகவின் மெகா பிளான்…

Posted by - December 17, 2025 0
கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பாஜக…

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Posted by - July 11, 2025 0
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி…

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை – மகன்! காரணமான முகுந்தன் யார்?

Posted by - December 28, 2024 0
விழுப்புரத்தில் இன்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *