நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி

182 0

இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக கேள்வி:

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நேற்று தெளிவாக பேசிவிட்டார். ஆனால், தேசிய கல்வி கொள்கையை ஏற்று
PM SHRI திட்டத்தை செயல்படுத்த MoU போட தயார் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான  அரசு கடிதம் எழுதியது ஏன்?  இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழக அரசின் கடிதத்தில் இருப்பது என்ன?

தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி மத்திய அரசு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “பள்ளிக் கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல முயற்சிகளை செயல்படுத்தி எங்களது மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரமான கல்வியை வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.

23.02.2024 தேதியிட்ட உங்களது கடிதத்தைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், மாநில அரசால் கையெழுத்திடப்படும். 2023-24ஆம் நிதியாண்டிற்கான 3வது மற்றும் 4வது தவணையை தயவு செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தமிழக அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு

Posted by - December 2, 2024 0
10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாக அண்ணாமலை சாடல். தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *