உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

150 0

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வைரஸ் பாதிப்பு:

அப்போது, அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் பனிமூட்டம் என்பது வழக்கமாக மார்கழி முடிந்ததுமே சரியாகிவிடும். ஆனால், இன்னமும் கூட பிப்ரவரி மாதத்தில் தொடர்கிறது. காலையில் பனிமூட்டம் 7, 8 மணி வரை உள்ளது. பனிமூட்டம் காரணமாக வெப்பநிலை குறைவாக இருப்பதால் வைரஸின் தாக்கம் வைரஸின் வளர்ச்சி இந்த நேரத்தில் அதிகமாக உள்ளது.

ஆனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையைப் பொறுத்தவரை அதிகளவில் பாதிப்பு வரவில்லை. அனைத்து வசதிகளும் இருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக சோதிக்கிறார்கள். அதுபோன்று அவர்களுக்கு பாதிப்பு இருந்தால் அடுத்த கட்டத்திற்கு அனுப்புகிறோம்.

பாதிப்பு:

நேற்று எல்லாம் முதியவர்கள் யாருக்கும் ஒரு பாதிப்பு கூட கிடையாது. ஜனவரி மாதத்தில் 5,6 பேர் இருந்தார்கள். குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களுக்கு வைரல் தொற்று ஏற்பட்டால் கூடுதல் பாதிப்பு இருக்கும். அதாவது, 5 நாளில் சரியாக வேண்டியது 10 நாளில் சரியாகும்.

யார் ஒருவருக்கு எதிர்பாற்றால் குறைவாக இருக்கிறதோ குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் இவர்களுக்கு தொற்று ஏற்படும்போது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும். இதற்காகவே அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா பாதிப்பு:

குழந்தைகளுக்கு இதயத்தில் தொற்று உள்ளது, அந்த குழந்தைகளுக்கு சளிப்பிரச்சினை வராமல் இருக்க வேண்டும், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை அதுபோன்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் 2 டோஸ் என்று அளிக்கப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்:

வைரஸ் தாக்குதலுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி ஆண்டுதோறும் மாறும். கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியை மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இருமல், தும்மல் இருப்பவர்களிடம் அருகில் போகக்கூடாது. இருமினாலோ. தும்மினாலோ கைகளை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். காய்ச்சிய நீரை பருக வேண்டும்.

கூட்டமான இடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வைரல் காய்ச்சல் என்றால் கண்ணில் தண்ணீர் ஊற்றுவது, மூக்கில் தண்ணீர் ஊற்றுவது, தொண்டை கரகரப்பாக இருப்பது, காது வலி, உடல் வலி இரண்டு நாட்களுக்கு அப்படி இருக்கும். அதன்பிறகு அப்படி இருக்காது. அதேநேரத்தில் திரவ உணவுகளை எடுத்து நன்றாக ஓய்வு எடுத்தாலே சரியாகும்.

மருத்துவ ஆலோசனை:

மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் டானிக் பலவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், மருத்துவர் ஆலோசனையுடன் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை

Posted by - November 28, 2023 0
சென்னை: பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு…

எங்களை இணைக்காதீங்க… எங்களை இணைச்சிடுங்க: மாறுபாடான மனுக்கள் வந்த இடம் எது தெரியுங்களா?

Posted by - January 8, 2025 0
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் எங்கள் கிராமம் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலை திட்டம் உட்பட அரசு ஏழை மக்களுக்காக அறிவிக்கும் எவ்வித திட்டங்களிலும் நாங்கள் பயன்பெற இயலாது. தஞ்சாவூர்: எங்களை…

குழந்தையை பலாத்காரம் செய்து எரித்த வழக்கில் திருப்பம்! தஷ்வந்த் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Posted by - October 8, 2025 0
தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து ,உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வழக்கில், தஷ்வந்த் மரண…

யூடியூப் மூலம் செல்வத்தை அடைந்த இர்பான்: இதுதான் அவரது வெற்றி!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் யூடியூப் மூலம் பிரபலம் மற்றும் பொருளாதார வெற்றியை அடைந்த பலர் உள்ளனர், இதில் Mohamed Irfan (இர்பான்) முக்கியமானவர். இவர் 2009 ஆம் ஆண்டு தனது…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *