உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

191 0

முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் என முருகனுக்கு உகந்த நாட்களில் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பக்தர்கள் கனவில் முருகன் வந்தால் என்ன அர்த்தம்? என்பதை கீழே காணலாம்.

அடிப்படையில் முருகன் கனவில் வந்தால் அது நல்ல அறிகுறியாகவே ஆன்மீகத்தில் பார்க்கப்படுகிறது.

1. முருகப்பெருமான் குழந்தை வடிவத்தில் உங்கள் கனவில் காட்சி தந்தால், உங்கள் வீட்டில் புதிய வரவு உண்டாகப்போகிறது என்று அர்த்தம். அதாவது, குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

2. முருகப்பெருமான் திருமண கோலத்தில் அதாவது வள்ளி – தெய்வானையுடன் கனவில் வந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று அர்த்தம். அதேசமயம், இதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருந்தால் நிறைவேற்ற வேண்டும் என்பதும் இதற்கு மற்றொரு அர்த்தமாக கூறுவார்கள்.

3. கந்த கடவுளின் வேல் உங்கள் கனவில் வந்தால், உங்களுக்கு எப்போதும் துணையாக அவர் உள்ளார் என்று அர்த்தம்.

4. திருச்செந்தூர் முருகன் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் அந்த கந்தன் அருளால் அகலும் என்பதே அர்த்தம். அதன் பிறகு நீங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவீர்கள்.

5. சேவற்கொடியோன் சிலை வடிவத்தில் கனவில் வந்தால் நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று கைகூட உள்ளது என்று அர்த்தம்.

6. பழனியில் ஆண்டியாக காட்சி தந்த முருகன் அதேகோலத்தில் கனவில் வந்தால் கஷ்டங்கள் நீங்கி, கடன் சுமைகள் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது அர்த்தம்.

7. பாலாபிஷேகம், தேனாபிஷேகம் என ஏதாவது அபிஷேக கோலத்தில் கந்தன் காட்சி தந்தால் உங்களுக்கு எதிராக இருந்த நிலை அகன்று உங்களுக்கு சாதகமான நிலை வரப்போகிறது என்று அர்த்தம்.

8. சந்தன காப்பு அலங்காரம், ராஜ அலங்கார போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தில் முருகன் உங்கள் கனவில் வந்தால் வாழ்வில் மிகப்பெரிய ராஜயோகம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம்.

பொதுவாக முருகப்பெருமான் உள்பட எந்த இறைவன் உங்கள் கனவில் வந்தாலும் அது நல்ல அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Related Post

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - May 8, 2023 0
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த…

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! – பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்!

Posted by - January 9, 2025 0
கடந்த மாதம் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து உணவுத்திருவிழா நடத்தினர். பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா என்பது குறித்து துணை…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *