டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் இன்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிஎம் கிசான் எனப்படும் “பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டம்.
விவசாயிகளுக்கு பலன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்பார்கள். இந்த திட்டத்தின்கீழ், நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது.. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தில், விவசாயிகள் தங்கள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இன்று தவணை தொகை விடுவிப்பு அதன்படி, பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சொல்லும்போது, “பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிநிலையை தொடர்ந்து பலப்படுத்தும். இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.இன்று தவணை தொகை விடுவிப்பு அதன்படி, பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சொல்லும்போது, “பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிநிலையை தொடர்ந்து பலப்படுத்தும். இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்
pm kisan
pm kisan 19th installment date
pmkisan
pm kisan status
kisan samman nidhi
pm kisan yojana
pm kisan samman nidhi yojana
पीएम किसान
beneficiary status pm kisan samman nidhi
pm samman nidhi
pm kisan 19th installment date 2025
किसान
kisan samman nidhi yojana
pm kisan ekyc
pm kisan nidhi
pm kisan nidhi yojana
प्रधानमंत्री किसान सम्मान निधि
nidhi
agriculture