சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?

126 0

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னை விரையும் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நிலை தொடர்பாக, மருத்துவர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதோடு, நாகை பயணத்தை முடித்துக்கொண்டு, விரைந்து சென்னை திரும்பியவர் நேரடியாக மருத்துவமனைக்கும் சென்று நலம் விசாரித்துள்ளார். தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

யார் இந்த தயாளு அம்மாள்?

தயாளு அம்மாள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி ஆவார். இவருக்கு தற்போது 92 வயது என்பது குறிப்பிடத்தக்கது.  கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி  மு. க. அழகிரி,  மு. க. செல்வி,  மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. தமிழரசு என நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தது. திமுகவின் ஆ. ராசா மத்திய அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செயதாக புகார் எழுந்தது.  அந்த வழக்குல் தயாளு அம்மாளையும் சேர்த்து மத்திய புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

மின் கட்டண மென்பொருள் மாற்றம்!

Posted by - May 14, 2024 0
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக உயரம் கொண்ட மின் வயர்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட புதைவடங்கள் மூலமாகவும், நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது.இதில் அதிக…

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - October 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

போராடும் ஆசிரியர்கள் மீது **ஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!

Posted by - January 13, 2026 0
எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர். சம வேலைக்கு…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *