“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

137 0

திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது அரசியல் குறிக்கோள் எனவும் விஜய் தெரிவித்தார்.

திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று கொள்கை விளக்க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தவெக முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏன் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின்கொள்கைகள் குறித்து விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கொள்கை கோட்பாட்டு அளவில் நாம் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம பிரிச்சு பார்க்கப் போறது இல்ல. திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பதுதான் நம்முடைய தாழ்மையான கருத்து. அதனால் நாம் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ்நாட்டு உரிமைகள் சார்ந்த, இந்த மண்ணுக்கான மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளை நம்முடைய கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போறோம்” என்று தெரிவித்தார்

முன்னதாக பேசிய விஜய், பெரியார் எங்கள் கொள்கை தலைவர். கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அண்ணா சொன்ன மாதிரி – ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களது நிலைப்பாடும்.ஆனாலும், பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை பெரியாரின் இவை அனைத்தையும் முன்னெடுக்கபோகிறோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது அரசியல் குறிக்கோள் எனவும் விஜய் தெரிவித்தார்.பெரியாரை அடுத்து எங்கள் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர், அவர் இந்த மண்ணில் மதசார்ப்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக விளங்கும் அவரை எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம்.இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். வகுப்புவாத பிரதிநிதித்துவத்தையும், சாதிய ஒடுக்குமுறையும் நிலைநிறுத்தபோராடும் மாபெரும் தலைவரான அவரையும் எங்கள் கொள்கை தலைவராக சொல்வதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

Related Post

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

தமிழகத்தை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் : பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Posted by - March 16, 2023 0
இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும்…

பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

Posted by - January 1, 2026 0
2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள். குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம…

உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – அண்ணாமலை கேள்வி

Posted by - May 29, 2023 0
முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…

’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!

Posted by - April 21, 2025 0
எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்- விசிக. திமுகவை மட்டுமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *