தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!

128 0

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது.

திமுக கூட்டணிக் கட்சிகள் கிட்டத்தட்ட அப்படியே நீடிக்கும் என்ற நிலை இருந்தாலும் புதிய கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ள நிலையில் விறுவிறுப்பு கூடியுள்ளது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்த நிலையில்  தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளது. தேமுதிக அதிமுகவுடன் தான் கூட்டணி தற்போது தொடர்கிறது என சொல்லியுள்ளது.

தவெகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புவதாக செய்திகள் வெளியாகின. அதேபோல் விஜயும் திமுக பாஜக, நாம் தமிழர் கட்சியை சாடினாலும் அதிமுக மீது சாஃப்ட் கார்னர் இருப்பதாக பேசப்படுகிறது. இதனால் தவெக அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என பேசப்பட்டது.

இதனிடையே பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அண்ணாமலை முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி மகனை பிடித்து அமித்ஷாவிடம் பேசவைத்துள்ளார் அண்ணாமலை. அதனால் மீண்டும் கூட்டணி மலருமோ என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுமட்டுமல்லாமல் எஸ்.பி வேலுமணி இல்ல திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் இபிஎஸ் கலந்து கொள்ளாதபோது பாஜக தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் கூடி குலாவினர். இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி மலர வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, “திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக இருக்கிறது. திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி. மற்ற கட்சிகள் எதுவும் எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவை வீழ்த்துவதுமட்டும்தான் எங்களுக்கு குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அண்ணாமலை “பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி; பா.ஜ.க. நோட்டா கட்சி; பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை” என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இபிஎஸ், “அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டாரா? கூட்டணி பற்றி 6 மாதங்களுக்கு பிறகுதான் முடிவு என தெளிவாக சொல்லிவிட்டேன். அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை எந்த கட்சிக்காகவும் கூட்டணிக்காக தவம் கிடந்ததாக சரித்திடம் கிடையாது” எனத் தெரிவித்தார்.

Related Post

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

Posted by - May 8, 2024 0
சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு

Posted by - March 3, 2025 0
இந்தியாவின் கடன் தொகை 55.87 லட்சம் கோடியில் இருந்து 181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - June 10, 2024 0
அரசியலில் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது : பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *