குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு

111 0

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர்

புதுச்சேரியில் 21 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1000 உதவித்தொகை, ரூபாய் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டபேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான ரூ.13,600 கோடிக்கான முழு பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டசபையின் கூட்டத் தொடர் நேற்றுமுன்தினம் கவர்னர் உரையுடன் துவங்கியது.

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது முதல்வர் பேசுகையில், “புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைகளில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி சேர்த்தல் ஆகியவை இணையதளம் முலம் மக்கள் சரிசெய்ய வழிவகை செய்யப்படும். புதுச்சேரியில் மதிய உணவு திட்டத்தில் இனி அனைத்து நாட்களும் முட்டை வழங்கப்படும்.

புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள இசிஆர் பேருந்து நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். இசிஎஸ் பேருந்து நிலையத்துக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மத்திய சிறையில் ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஏழை சிறை கைதிகள் நலத்திட்டத்தின் மூலம் ஏழை கைதிகளுக்கு தேவைப்படும் சட்ட உதவி செய்யப்படும் புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். “புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியகங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் பொருட்காட்சி விழா நடத்தப்படும். 30 வயது கடந்த திருமணம் ஆகாத, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உயிரிழந்தால் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் நிதி ரூ.25,000ஆக உயர்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Post

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: மேலும் 3 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை- சாலைகளில் மக்கள் போராட்டம்

Posted by - July 22, 2023 0
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம்…

ஆந்திரா ரெயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு, தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணி- ரெயில்கள் ரத்து

Posted by - October 30, 2023 0
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே…

வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

Posted by - October 29, 2024 0
லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில்…

ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

Posted by - November 15, 2024 0
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா…

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *