ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

141 0

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நேற்று ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாயமான வகையில் 466 ஆக பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இன்று காற்றின் தரக்கு குறியீடு 441 ஆக பதிவாகி அச்சுறுத்தி வருகிறது. இது ஒரு நாளுக்கு ஒருவர் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான அளவில் காற்றில் மாசு எள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் மிக குறைந்த அளவிலே தென்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர், வயதானவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனைகள் சுவாசக் கோளாறு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக டெல்லி முழுவதும் தெரிவுநிலை குறைந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல் “நிலை 3” எனும் செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது.BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. மின்சாரம், சிஎன்ஜி அல்லாத வெளிமாநில பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.காற்று மாசை கட்டுப்படுத்த “நிலை 3” செயல் திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Post

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

Posted by - November 16, 2024 0
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது. நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில்…

காதல் திருமணங்களுக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாக்கப்படும்

Posted by - December 18, 2025 0
திருமணமும்.. அதிகரிக்கும் பிரச்னையும் திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. காதல், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என இருவகைகளில் திருமணமானது நடைபெறுகிறது. அதேசமயம் சாதி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *