’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?

264 0

நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் பேசுவார்- கைலாசா.

பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், நேரலையில் தோன்றிப் பேசுவார் என்று கைலாசா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என்று அவரின் சகோதரி மகன் வீடியோவில் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்தத் தகவல்களை கைலாசா நிர்வாகம் மறுத்துள்ளது.

நேரலையில் நித்தியானந்தா

இதுகுறித்து நித்தியானந்தாவின் கைலாசா அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் வெளியிட்டுள்ள பதிவில், ’’நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்!

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார்.

நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: ஏப்ரல் 2, 2025 | 7PM ET. இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நித்தியானந்தாவைப் படுகொலை செய்ய 70 முறை முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் அதில் இருந்து தப்பிப் பிழைத்ததாகவும் கைலாசா தெரிவித்து இருந்தது.

மேலும் கைலாசா கூறும்போது, “ இந்து மதத்தின் போதகர் நித்தியானந்தா (SPH) உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என்று பல ஊடகங்கள் வேண்டுமென்றே கூறி வருகின்றன. அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிரோடும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்பதை கைலாசா அறிவிக்கிறது.

தெலுங்கு வருடப் பிறப்பன்று உரையாற்றிய நித்தியானந்தா?

மேலும் மார்ச் 30, 2025 அன்று, உகாதி கொண்டாட்டங்களை அங்கீகரித்து, அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் லட்சக்கணக்கான இந்து புலம்பெயர்ந்த மக்களை நித்தியானந்தா ஆசீர்வதித்தார்.

இந்த சூழலில், அவரை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. இந்த பொய்யான தகவலானது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன’’ என்று கூறி இருந்தது.

உண்மையாகவே தோன்றிப் பேசுவாரா?

நித்தியானந்தா உயிருடன்தான் இருக்கிறார் என்று இன்று அதிகாலை கைலாசா நிர்வாகம் வெளியிட்ட வீடியோ, பழைய காணொலி என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய லைவ் வீடியோவில் உண்மையாகவே அவர் தோன்றிப் பேசுவாரா அல்லது நித்தியானந்தாவின் பழைய காணொலி வெளியிடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Related Post

”மாட்டிக்கிட்ட” பொய்யா சொல்றியே பங்காளி..! பாக்., எப்படிலா உருட்டி இருக்கு பாரேன்..!

Posted by - April 25, 2025 0
பஹல்காம் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானை நம்ப முடியாததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் உலக நாடுகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது. ”நோ”…

ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்

Posted by - April 15, 2023 0
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது…

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

Posted by - August 11, 2023 0
வார்சா: எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.…

திருட வந்த இடத்தில் நாயுடன் கொஞ்சி விளையாடிய வாலிபர்

Posted by - August 9, 2023 0
வீடுகளில் நாய் வளர்ப்பதற்கு முக்கிய காரணம் திருடர்களிடம் இருந்து வீட்டை காக்கும் என்பது தான். ஆனால் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அதற்கு…

காதலிக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.900 கோடி சொத்தை உயில் எழுதி வைத்த முன்னாள் இத்தாலி பிரதமர்

Posted by - July 10, 2023 0
ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *