ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

220 0

தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு:

தில்லை நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் வீட்டிலும், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள அமைச்சரின் மகனும், எம்.பியுமான அருண் நேருவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  வெளியாகியுள்ள தகவல்களின்படி, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு மற்றும் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் தொடர்புடைய மின் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த 2018ம் ஆண்டிலும் இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அப்போது 100 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிவைக்கப்படும் திமுக?

கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், திமுக அரசின் மூத்த அமைச்சரான கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள துரைமுருகன் வடமாவட்டங்களிலும், செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்திலும் மற்றும் கே. என். நேரு மத்திய மண்டலத்திலும் திமுகவின் முகமாக பார்க்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மூன்று பேர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனைகள் திமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டணி?

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுகவை அரசியல் எதிரியாக கொண்டு செயல்படும் கட்சிகளை தங்களது தேசிய கூட்டணியில் கொண்டு வர பாஜக முயல்கிறது. இதுதொடர்பாக அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, உள்துறை அமைச்சரான அமித் ஷா சந்தித்து பேசியிருந்தார். இதுபோக திமுகவை எதிர்த்து தீவிரமாக களமாடி வரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் தங்களது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டே, மறுபுறம் திமுக கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் பணியில் பாஜக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே அடுத்தடுத்து அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு

Posted by - November 4, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…

கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்… யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

Posted by - July 6, 2024 0
தலித் மக்களின் குரலாக திகழ்ந்தவர், ஒட்டுமொத்த சென்னையே பேசும் அளவுக்கு வளர்ந்துள்ள ஆம்ஸ்ட்ராங் யார்? சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *