பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

119 0

சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது கூடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொன் ஜெயஸ்ரீராம், எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனமும் இல்லை.

சட்டசபையில் ஷாக் தந்த பிடிஆர்:

அதற்கு அருகிலேயே மைசூர் மற்றும் பெங்களூர் உள்ளது. அங்கிருப்பவர்களும் எங்கள் ஊரில் வந்து வேலை செய்யும் வகையில் எங்கள் ஊர் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைத்து தர அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, இந்த கூட்டத்தொடரிலே இந்த அவையில் என்னுடைய துறையில் உள்ள சிக்கல்களை கூறியிருக்கிறேன். நிதியோ மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படவில்லை. ஒரு சிறு பங்குதான் எனது துறையில் செயல்படுகிறது.

டைட்டல், நியோ டைட்டல் தொழில்துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும் அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால், யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர் செய்து கொடுப்பார் என்று நம்புகிறேன். எங்களிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார். பின்னர், பேசிய சபாநாயகர் முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுங்கள். பாசிட்டிவாக பதில் சொல்லுங்கள் என்று கூறினார்.

தொடர் அதிருப்தி:

அமைச்சர் பிடிஆர் பாரம்பரியமான திமுக-வைச் சேர்ந்தவர். அதேசமயம் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராக கட்சியினராலும், பொதுமக்களாலும் கருதப்படுபவர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பின்னர் சில காரணங்களால் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது முதலே கட்சியில் சிலரது செயல்பாடுகளில் பிடிஆர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று சட்டசபையிலே தனது துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவதாகவும், யாரிடம் அதிகாரமும், நிதியும், திறனும் இருக்கிறதோ என்று வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பகிரங்கமாக சட்டசபையில் வெளிப்படுத்தி வருகிறார்.

திமுக-விற்கு பின்னடைவு:

பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பிடிஆர் இன்று மறைமுகமாக குறிப்பிட்டது தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசையே குறிப்பிட்டிருப்பதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.

அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக-வினர் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் அடுக்கி வருகின்றன. இதில் அவ்வப்போது சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிடிஆர் சட்டசபையிலே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதும் திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகள் வேதனை:

ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களின் துறைக்கே போதிய நிதி ஒதுக்காத இந்த அரசு, மற்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி தொகுதி உறுப்பினர்களின் தொகுதிக்கும் எப்படி நிதி ஒதுக்கும்?என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் இருப்பதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  மேலும், தேர்தலுக்கு முன்பு கட்சிக்குள்ளே இருக்கும் உட்கட்சி பூசல், மூத்த நிர்வாகிகள் இடையேயான சிக்கல் ஆகியவற்றை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

Related Post

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

Posted by - February 14, 2025 0
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு…

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - January 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *