கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

150 0

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.?

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களை காணலாம்.

கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் என்ன.?

இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது.

தற்போது பரவிவரும் புதுவகை வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், அதனால் பாதிப்புகள் குறைவுதான் என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி, பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் 2 பேரும், கர்நாடகா மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் 5,364 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, கேரளாவில் 1,679 பேரும், குஜராத்தில் 615 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, இதுவரை 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தற்போது, NB1.8.1, LF.7 ஆகிய புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த வகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

Related Post

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

Posted by - November 23, 2023 0
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி…

“2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை

Posted by - October 25, 2024 0
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.…

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

Posted by - November 30, 2023 0
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது.…

தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

Posted by - June 10, 2023 0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *