வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

128 0

கும்பகோணத்தில் வடிவேல் பட பாணியில், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி கார் திருடி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், தனது காரை விற்பனை செய்வதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தை சேர்ந்த வீரசெல்வம் என்பவர் கார் குறித்து விசாரித்துள்ளார். மேலும், வால்பாறை வரையெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் காரை எடுத்துகொண்டு கும்பகோணம் வாருங்கள், அதற்கான பணத்தை நான் தறுகிறேன் என கூறியுள்ளார்.அதனை நம்பிய சக்திவேல் , வால்பாறையில் இருந்து கும்பகோணத்திற்கு காரை எடுத்து சென்றுள்ளார். சாக்கோட்டை பகுதியில் சக்திவேலை சந்தித்த வீரசெல்வம், காரை ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிகொள்வதாக கூறியுள்ளார். வழக்கம்போல இதையும் நம்பிய சக்திவேல் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து, ஓட்டி பார்ப்பதற்காக காரை எடுத்து சென்ற வீரசெல்வம் கடைசி வரை திரும்பி வரவில்லை. இது குறித்து சக்திவேல் அளித்த புகார் அடிப்படையில், காரை திருடி சென்ற வீரசெல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

Related Post

சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்

Posted by - December 12, 2023 0
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Posted by - August 14, 2023 0
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த…

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *