மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையில் இளம் வயதுடையவர்களான ஆகாஷ் மற்றும் சிந்துஜா இருவரும் காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் காதலன் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் காதலி சிந்துஜாவுக்கு தெரியவர இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. நிலையில் சம்பவத்தன்று தன் வீட்டுக்கு தேவை என ஆகாஷை சிந்துஜா பெட்ரோல் வாங்கி வரக் கூறியுள்ளார்.
பின்னர் பைக்கில் ஒன்றாக வரும்போது மீண்டும் அந்த பிரச்சனை குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த சிந்துஜா உடனே தன்னிடம் இருந்த பெட்ரோலை தன் மீதும் ஆகாஷ் மீதும் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.
இதில் இருவரும் பல காயமடைந்த நிலையில் இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.