சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

141 0

சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு பல்​வேறு மருத்​துவ பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கடந்த 24-ம் தேதி மேற்​கொள்​ளப்​பட்ட கூடு​தல் பரிசோதனை​யில் அவருடை தலைசுற்​றல் பிரச்​சினைக்​கு, அவரது இதய துடிப்பு சீரற்று இருந்​ததே காரணம் என்​பது தெரிய​வந்​தது. இதய இடை​யீட்டு சிகிச்சை நிபுணர் ஜி.செங்​கோட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு​வினர் முதல்​வருக்கு இதய துடிப்பை சீராக்​கு​வதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்​டனர்.தொடர்ந்து மேற்​கொள்​ளப்​பட்ட ஆஞ்​சியோ பரிசோதனை​யில் வேறு எந்த பாதிப்​பும் இல்லை என்​பது உறு​தி​யானது. முதல்​வரின் உடல்​நிலையை மருத்​து​வர்​கள் தொடர்ந்து கண்​காணித்து வந்​தனர். மருத்​து​வ​மனை​யில் இருந்​த​வாறு அரசு அலு​வல்​களை முதல்​வர் மேற்​கொண்டு வந்​தார்.இந்​நிலை​யில், நேற்று மாலை சுமார் 6 மணி​யள​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார். மருத்​து​வ​மனை வளாகத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர் துரை​முரு​கன் உள்​ளிட்ட பலர் முதல்​வரை வரவேற்​றனர். மருத்​து​வ​மனை​யில் இருந்து தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலையில் உள்ள இல்​லத்​துக்​குச் சென்ற முதல்​வரை, சாலை​யின் இரு​புற​மும் திரண்டு இருந்த பொது​மக்​கள், கட்​சி​யினர் வரவேற்​றனர்.

இதைத்தொடர்ந்து முதல்​வர் ஸ்​டா​லின் வெளியிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: நலம் பெற்று வீடு திரும்​பினேன். மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த போது அக்​கறை​யுடன் விசா​ரித்​து, நலம் பெற வாழ்த்​திய அனைத்து அரசி​யல் இயக்க தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள், நீதிப​தி​கள், அரசு அதி​காரி​கள், திரை கலைஞர்​கள் என் உயிரோடு கலந்​திருக்​கும் அன்பு உடன்​பிறப்​பு​கள் உள்​ளிட்ட தமிழக மக்​கள் அனை​வருக்​கும் எனது நெஞ்​சார்ந்த நன்​றி.

மருத்​து​வ​மனை​யில் சிறப்​பான சிகிச்சை அளித்​து, நான் விரைந்து நலம்​பெற உறு​துணை​யாய் இருந்த மருத்​து​வர்​கள் மற்​றும் செவிலியர்​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மீண்​டும் அன்​பும், நன்​றி​யும். உங்​களுக்​காக உழைப்பை வழங்​கும் என் கடமையை என்​றும் தொடர்​வேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

முன்​ன​தாக, அப்​போலோ மருத்​து​வ​மனை மருத்​துவ சேவை​கள் இயக்​குநர் மருத்​து​வர் பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “மருத்​து​வர் செங்​குட்​டு​வேலு தலை​மையி​லான மருத்​து​வர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழு​மை​யாக குணமடைந்த முதல்​வர் இல்​லம் திரும்​பு​கிறார். முதல்​வர் நலமாக இருக்​கிறார். 3 நாள் இடைவெளிக்கு பின்​னர் வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது” என்​று தெரிவித்​துள்​ளார்.

Related Post

அக்கு அக்கா உடையுதா முடி.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகருன்னு தலைமுடி வளர்ச்சிக்கு மாஸ் டிப்ஸ்

Posted by - December 15, 2023 0
சென்னை: இன்றைய நவீன சூழலில், தலைமுடி கொட்டுவதும், பலவீமான தலைமுடியும், மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…

#BreakingNews‌ | காவலர் – நடத்துநர் சமாதானம்

Posted by - May 25, 2024 0
நாங்குநேரியில் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் சமாதானம்! #Tirunelveli #Nanguneri #Police #Conductor #TNpolice | #Transportdepartment | #Trafficpolice…

14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

Posted by - June 20, 2023 0
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *