தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் – இனிமே இப்படி தான், விலை?

187 0

பதிவு அஞ்சல் சேவையை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நிறுத்துவதாக தபால் துறை அறிவித்துள்ளது.

India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தபா துறை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பதிவு அஞ்சல் சேவைக்கு முற்றுப்புள்ளி:

இந்திய தபால் துறை, 50 ஆண்டுகளுக்கும் அதிகமான சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், அதன் புகழ்பெற்ற பதிவு அஞ்சல் (ரிஜிஸ்டர்ட் போஸ்ட் ) சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், செயல்பாடுகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக இந்த சேவை படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான சேவையாக உள்ள ரிஜிஸ்டர்ட் போஸ்ட் , அதன் நம்பகத்தன்மை, மலிவு மற்றும் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மைக்கு பெயர் பெற்றது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் வேலை வாய்ப்புகள், சட்ட அறிவிப்புகள் மற்றும் அரசாங்க கடிதப் போக்குவரத்து போன்ற முக்கியமான ஆவணங்களை வழங்க இந்த பதிவு அஞ்சல் சேவை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

25% வரை சரிவு

கடந்த 2011-12 ஆம் ஆண்டில் 244.4 மில்லியனாக இருந்த ரிஜிஸ்டர்ட் போஸ்ட்களின் எண்ணிக்கை,  2019-20 ஆம் ஆண்டில் 184.6 மில்லியனாக அதாவது 25 சதவிகிதம் வரை குறைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறியது, தனியார் கொரியர்கள் மற்றும் இ-காம்ர்ஸ்  தளவாடங்களின் போட்டியால் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்பீட் போஸ்டுடன் இணைப்பு:

அனைத்து துறைகள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் புதிய முறைக்கு மாற வேண்டும் என அஞ்சல் துறையின் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். இந்த இணைப்பு 1986 முதல் செயல்பட்டு வரும் ஸ்பீட் போஸ்டின் கீழ் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கண்காணிப்பு துல்லியம், விநியோக வேகம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இருப்பினும், ஸ்பீட் போஸ்ட் விலை அதிகமாக இருப்பதால், மலிவு விலை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. ரிஜிஸ்டர்ட் போஸ்ட்டின் தொடக்க விலை ரூ.25.96 ஆக இருக்க, ஒவ்வொரு 20 கிராமிற்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 50 கிராம் எடையிலான ஸ்பீட் போஸ்டிற்கான கட்டணம் ரூ.41 இல் தொடங்குகிறது, இதனால் 20-25% செலவு அதிகமாகிறது. இந்த விலை வேறுபாடு கிராமப்புற இந்தியாவை பாதிக்கலாம், அங்கு அஞ்சல் அலுவலகங்கள் தகவல் தொடர்புக்கு மிக முக்கியமானவையாக உள்ளன. சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மலிவு சேவைகளை நம்பியிருக்கும் சாதாரண குடிமக்களுக்கு சுமையாக மாறலாம். டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் பயனர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இந்த மாற்றம் அவசியம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சட்டப்பூர்வ ஆவண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு:

ஸ்பீட் போஸ்ட் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் போன்ற முக்கிய அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று தபால் துறை உறுதியளித்தாலும், இந்த நடவடிக்கை ரிஜிஸ்டெர்ட் போஸ்ட்டை நம்பிக்கையின் அடையாளமாகக் கருதும் பயனர்கள், குறிப்பாக பழைய தலைமுறையினர் மற்றும் கிராமப்புற சமூகத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஜிஸ்டெர்ட் போஸ்ட் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வேர்களைக் கொண்டுள்ளது, பாதுகாப்பான, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்புவதற்கான நம்பகமான முறையாக செயல்படுகிறது. வங்கிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் போன்ற நிறுவனங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிஜிஸ்டெர்ட் போஸ்ட், அதன் விநியோகச் சான்று மற்றும் மலிவு விலைக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்களில் விநியோகம் மற்றும் இடுகையிடலுக்கான சான்றுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, இது அரசுத் துறைகள், வங்கிகள், நீதிமன்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இணக்கம் மற்றும் ஆவணங்களை உறுதி செய்வதற்கான நம்பகமான முறையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்

Posted by - September 13, 2023 0
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

Posted by - August 24, 2023 0
புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர்…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *