தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

81 0

#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia

தவெக-வின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவின் ஊழலை பற்றி பேசியதாலேயே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டதாக கூறினார்.

மதுரை பாரபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பிரமாண்டமாக, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற போது, கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்தும், அமைச்சர் மூர்த்தி குறித்தும் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

“மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்“

இந்த மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும், மதுரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி, தவெகவின் மதுரை மாநாட்டிற்கு பல தடைகளை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார்.

“ஊழலை வெளிப்படுத்தியதாலேயே பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார்“

இதே மதுரை மண்ணைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சரின் மருமகனும், மகனும் மிகப் பெரிய ஊழல் செய்துவிட்டதாக கூறினார்.

அவர் அப்படி சொன்ன உண்மைக்காக அமைச்சரவையிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் என ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும், திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்வதாக பட்டியலிட்டு பேசினார்.

அண்ணாவின் குறிக்கோள்களில் இருந்து திமுக விலகிவிட்டதாகவும், அண்ணாவின் கொள்கைகளை எந்த கட்சியும் தற்போது பின்பற்ற வில்லை என்றும், அதை செய்யத் தான் தவெக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“பின்புற வாசல் வழியாக பாஜக-வை உள்ளே நுழையவிட்ட அதிமுக“

அதேபோல், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் மற்றும் அதை வழிநடத்திய ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து இன்றைய அதிமுக விலகிவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் அதிகாரத்தை அடைவதற்காக, இன்றைய அதிமுக தலைமை, பாஜக-வை பின்புற வாசல் வழியாக வரவழைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.

ஆனால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் உள்வாங்கி, அதை அரசியல் வெற்றியாக மாற்றி, 2026-ல் மிகப் பெரிய இளைஞர் புரட்சியை உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்து, அவர்களது கொள்கைகளை நிறைவேற்றுவோம் என ஆதவ் பேசினார்.

அறிஞர் அண்ணா கூறியதுபோல், ஏழைகளுக்கான அரசாக, ஒரு நேர்மையான அரசாக உருவாக்க, விஜய்யை, தம்பி வா, தலைமை ஏற்க வா என அறிஞர் அண்ணாவைப் போல் அழைப்பதாகக் கூறி அவ உரையை நிறைவு செய்தார்.

 

Related Post

”தமிழக அரசே.. விஜயை சுதந்திரமாக பேச விடுங்க” காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை

Posted by - September 23, 2025 0
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குத் திருட்டுக்கு…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

Posted by - August 4, 2025 0
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசியல் நாளுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *