ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.. ”கேன்சல் பண்ணிட்டா..” வார்னிங்

123 0

அதிபர் ட்ரம்ப் மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய வரிகள் ரத்து செய்யப்பட்டால் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சருஇத்துள்ளார்.

”பேரழிவை ஏற்படுத்தும்” என ட்ரம் வார்னிங்

உலக நாடுகள் மீது புதியதாக அமல்படுத்தப்பட்ட வரிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். ஒருவேளை அவற்றை நீக்கினால், அது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் புதிய வரி அறிவிப்புகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது என, அமெரிக்க நீதிமனறம் தீர்பளித்த அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போதைய சூழலில் இந்த வரி அப்படியே தொடருமெனவும், ட்ரம்ப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்ப் சொல்வது என்ன?

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தனது சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு உயர் பாகுபாடான மேல்முறையீட்டு நீதிமன்றம் நமது வரிவிதிப்புகளை நீக்க வேண்டும் என்று தவறாகக் கூறியது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த வரிவிதிப்புகளை நீக்கினால் அது நம்மை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும்,  நமது உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் மற்ற அனைவரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகள், நியாயமற்ற வரிகள் மற்றும் பிற நாடுகள், நண்பர் அல்லது எதிரிகளால் விதிக்கப்படும் வரி அல்லாத வர்த்தக தடைகளை அமெரிக்கா இனி பொறுத்துக்கொள்ளாது. இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அமெரிக்காவையே அழித்துவிடும். தொழிலாளர்களுக்கு உதவவும், ‘அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட’ பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆதரிக்கவும் இந்த வரிகள் சிறந்த கருவியாகும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது என்ன?

ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், அதன் மூலம் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதில்பயன்படுத்தி வருகிறார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலையின் போது அதிபருக்கு பரந்த அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது இதுபோன்ற பரஸ்பர வரிகளை விதிப்பது ஆகியவை அடங்காது என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

அதேநேரம், உச்சநீதிமன்றத்தினை அணுக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், தற்போதைய சூழலில் வரிகள் ஏதும் ரத்து செய்யப்படாது. குறிப்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரிகள் அப்படியே தொடர உள்ளது. மற்ற நாடுகளை போன்று இந்தியாவிற்கு 25 சதவிகிதம் வரி விகிதத்தோடு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக கூடுதலாக 25 சதவிகிதம் வரியும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்

Posted by - February 21, 2023 0
டோக்கியோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன்…

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

Posted by - November 22, 2025 0
ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- ஒரு லிட்டர் ரூ.272-க்கு விற்பனை

Posted by - February 16, 2023 0
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர் ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி…

ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

Posted by - August 24, 2023 0
புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின்…

இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்

Posted by - August 6, 2025 0
இந்தியாவிற்கு அமெரிக்கா விடுக்கும் வரி மிரட்டலும், வர்த்தக அழுத்தமும் சட்டவிரோதமானது என இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *