பிறந்தது கார்த்திகை… அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!

167 0

சிவபெருமான்,முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. காலை முதல் ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம். சிவபெருமான், முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.

பிறந்தது கார்த்திகை:

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி பிறக்கும் என்று  தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று கார்த்திகை மாதம் 1ம் தேதி பிறந்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிவதற்கான மாதம் ஆகும். இன்று 1ம் தேதி பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் காலை முதலே மாலை அணிந்து வருகின்றனர்.

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்:

சபரிமலை ஐயப்பனுக்கு வேண்டிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து வருகின்றனர். ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர மற்ற எந்த நேரத்திலும் இன்று மாலை அணிந்து கொள்ளலாம். இருப்பினும், அதிகாலையிலே குளித்துவிட்டு மாலை அணிவது சிறப்பு என்பதால் பெரும்பாலான பக்தர்கள் காலை நேரத்திலே மாலை அணிந்து வருகின்றனர். குருசாமி கைகளினாலோ, கோயில்களிலோ அல்லது வீட்டில் தாய்களின் கைகளிலோ பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

ஐயப்பனுக்கு மட்டுமின்றி இந்த மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமும் என்பதால் பக்தர்கள் பலர் முருகனுக்காகவும் மாலை அணிந்து வருகின்றனர். திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் ஆலயங்களுக்காக வேண்டிக்கொண்டு மாலை அணிந்து வருகின்றனர்.

சிவாலயங்களில் கொண்டாட்டம்:

கார்த்திகை மாதம் என்றாலே மிகவும் முக்கியமான நாள் கார்த்திகை தீபம் ஆகும். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நாளில் ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் குவிவார்கள். கார்த்திகை தீபம் டிசம்பர் 3ம் தேதி வருகிறது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சிவாலயங்களிலும் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

சபரிமலை, சிவாலயங்கள் மற்றும் முருகப்பெருமான் கோயில்களுக்கு இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படும் என்பதால் அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மந்தமாகும் இறைச்சி, மீன் விற்பனை:

கார்த்திகை 1ம் தேதி இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலை முதலே சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகிறது. மேலும், இந்த மாதம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவார்கள் என்பதால் இறைச்சி, மீன் விற்பனையும் மந்தமாகவே இருக்கும். மேலும், இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Related Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

‘கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திமுக அரசு’ – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - May 16, 2023 0
திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. – அண்ணாமலை கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்த இயலாமல் திமுக அரசு செயலிழந்து நிற்பதாக பாஜக தமிழக தலைவர்…

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Posted by - October 7, 2024 0
வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

”கருணாநிதி காலத்து டெக்னிக், சோத்துல கல்லு” ஷூட்டிங் ஓவரா? ஸ்டாலினை நக்கலடித்த ஈபிஎஸ்

Posted by - April 11, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மறைந்த கருணாநிதி காலத்து டெக்னிக்கை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

திண்டுக்கல் அருகே ஊராட்சிப் பணியிலிருந்து நீக்‍க முயன்ற திமுக கவுன்சிலர் – விஷம் குடித்த பணியாளர் மருத்துவமனையில் அனுமதி

Posted by - November 26, 2022 0
திண்டுக்கல் அருகே திமுக கவுன்சிலர் தலையீட்டால் வேலை இழந்த தொழிலாளி எலி மருந்து குடித்து உயிருக்‍கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். வடமதுரை அடுத்த வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *