பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி

146 0

ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் மக்களை ஏமாற்றி உள்ளார்

இந்த செயற்பாடானது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் துரோகச் செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கடந்த தேர்தலில் தோற்றவர்கள் இப்போது பின் வாசலால் பிரவேசித்து தமிழரசுக் கட்சியில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களும் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதியுடன் அண்மையில் நடந்த சந்திப்பில் தமிழ் மக்கள் நிராகரித்து இலங்கைத் தமிழரசு கட்சியே கைவிட்டதாகக் கூறிய ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது வலியுறுத்தி வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

Related Post

அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

Posted by - July 7, 2025 0
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான்…

மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

Posted by - November 22, 2025 0
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள்…

புத்தாண்டு 2026 : புதிய தொடக்கம், புதிய நம்பிக்கை

Posted by - December 31, 2025 0
2026 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் புதிய எதிர்பார்ப்புகளும், வளர்ச்சிக்கான கனவுகளும் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களை பாடமாக கொண்டு, முன்னேற்றம், அமைதி மற்றும் நம்பிக்கை…

உக்ரைனோடு நிற்காது: உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Posted by - September 20, 2023 0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது…

178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

Posted by - October 14, 2023 0
வாஷிங்டன்: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *