டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ – முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்

185 0

டிட்வா புயலால் சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலெர்ட் விடுத்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர செயல்பாட்ட மையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிட்வா புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் கூறியது என்ன.?

ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில், தெற்கு பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ரெட் அலெர்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டோம்“ என தெரிவித்தார்.

மேலும், “ஏற்கனவே, நேற்றைய தினம் இதுகுறித்து என்னுடைய தலைமையில், தலைமைச் செயலாளர் முன்னிலையில், உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட்டி, உரிய அறிவுரை வழங்கியிருக்கிறோம்“ எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அதோடு, எல்லா மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், அனைவரும் அவரவர்களுக்கு உரிய மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், எந்த இடத்திலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படாமல் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் எக்ஸ் தள பதிவு

இதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை போட்டுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த பதிவில்,

“#CycloneDitwah பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.“ என்று கூறியுள்ளார்.

 

Related Post

கோடை வெயில் தொடங்கும் முன்பே குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டன

Posted by - February 20, 2023 0
தென்காசி: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.…

அட்சய திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

Posted by - May 10, 2024 0
சித்திரை மாதத்தின் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை மதியம்…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

Posted by - June 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *