தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது என டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்
தினந்தோறும் மது விற்பனையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் சுமார் 4000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலங்களில் மது விற்பனை நாளொன்றுக்கு 150 முதல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே வார நாட்களில் மது விற்பனையானது 100 கோடியை எட்டுகிறது. எனவே மது விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதன் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசுக்கு உதவியாக உள்ளது.
மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10ரூபாய்
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமானது தொடங்கபட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதலில் மலைப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வைக்க இட வசதி உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சிறிய இடத்திலையே மதுபான கடைகள் உள்ளது. எனவே மதுபான பாட்டில்களை எப்படி பாதுகாப்பாக வைக்க முடியும் எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் பல கடைகள் கடந்த வாரம் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய சலுகைக்கள் வழங்க வேண்டும், தொகுப்பூதியம் முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக போராட்டடக்குழுவினர் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.