டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

36 0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது என டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்

தினந்தோறும் மது விற்பனையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் சுமார் 4000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலங்களில் மது விற்பனை நாளொன்றுக்கு 150 முதல் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே வார நாட்களில் மது விற்பனையானது 100 கோடியை எட்டுகிறது. எனவே மது விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதன் மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசுக்கு உதவியாக உள்ளது.

மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் 10ரூபாய்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டமானது தொடங்கபட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதலில் மலைப்பகுதிகளில் மட்டும் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வைக்க இட வசதி உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் சிறிய இடத்திலையே மதுபான கடைகள் உள்ளது. எனவே மதுபான பாட்டில்களை எப்படி பாதுகாப்பாக வைக்க முடியும் எனக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் பல கடைகள் கடந்த வாரம் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய சலுகைக்கள் வழங்க வேண்டும்,  தொகுப்பூதியம் முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக போராட்டடக்குழுவினர் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.

Related Post

கழிப்பறை இருக்கையில் இருந்து ‘இந்த’ ஆபத்தான நோய்களால் நீங்க பாதிக்கப்படலாம்… அப்ப என்ன செய்யணும் தெரியுமா?

Posted by - December 28, 2023 0
கழிப்பறை இருக்கைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் ஆபத்தான தொற்றுநோய்களை பெற வாய்ப்புள்ளது. கழிப்பறை இருக்கையிலிருந்து நீங்கள் பெறக்கூடிய சில நோய்த்தொற்றுகள் பற்றி…

நைட் பார்ட்டியில் கொக்கைன்.. சிக்கும் விஐபி நடிகர், நடிகைகள்.. வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி

Posted by - June 26, 2025 0
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் கைதானது போன்று பல விஐபி நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்கள் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில்…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை – அமைச்சரவை அழைப்பு

Posted by - December 19, 2025 0
பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme – OPS) தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் வகையில், தமிழ்நாடு அமைச்சரவை அரசு ஊழியர் சங்கங்களை…

திமுக செய்யும் ஓவர் அராஜகம் ..கோட் படத்துக்கு வரும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்த தளபதி

Posted by - September 2, 2024 0
செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக திமுகவினர் பலவிதமான தடைகளை போட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *