ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

7 0

சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் மகளிருக்கு ஒரு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை தடுக்கப்பட்டதாக என்றும், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை யார் தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்களும் 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எப்படி அதை தடுப்போம் என்றும் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தல் உஷ்ணத்தின் காரணமாகத் தான் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள், கடந்த 4 ஆண்டுகளாக அதை கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதா ஜீவன் பதில்

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கேள்வியை கேட்பதால், அதன் அடிப்படையில் பதில் கூறுவதாக தெரிவித்து, இனி ஒவ்வொரு வருடமும் இந்த 2000 ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் ஒருவர் கூறினால், அது அரசின் அறிவிப்பு போன்றது தான்.

அதனால், இதன் அடிப்படையில், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில், மகளிருக்கு 2000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.

இதேபோல், இது குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் வருவதால், வெயில் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் தான், மகளிருக்கு கூடுதலாக கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த கோடைகால சிறப்புத் தொகை கொடுத்தது, எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

Related Post

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - October 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - October 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *