நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு.

119 0

TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்.

சேன்லகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கை நிறுத்திய மத்திய அரசு:

செய்தி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் பாயிண்ட்களை, 4 வாரம் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில்  பரபரப்பை கூட்டும் விதமாக, உறுதிப்படுத்தப்படாத மற்றும் யூகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதால், இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுநலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு சொல்வது என்ன?

இதுதொடர்பான அறிக்கையில், செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங் பாயிண்ட் அறிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, பார்க் (BARC) எனப்படும் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதில், “இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில், சில செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை காண்பிப்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கவனித்துள்ளது, இது பொது மக்களிடையே, குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பொது நலனுக்காக, செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகளை (TRP) வெளியிடுவதை நான்கு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லா கட்டுவதில் சிக்கல்:

தொலைக்காட்சி சேனல்களுக்கான வருவாய் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. அந்த விளம்பரங்களுக்கான ஒப்பந்தம் என்பது இந்த டிஆர்பி ரேட்டிங் மூலமே கிடைக்கிறது. எங்களுக்கு இத்தனை கோடி பார்வையாளர்கள் உள்ளனர், செய்தி சேனல் சந்தையில் நாங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க, பார்க் வழங்கும் இந்த டிஆர்பி எனப்படும் ரேட்டிங் புள்ளிகளே சாட்சியமாக உள்ளன. தற்போது அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு நிறுத்தி வைத்து இருப்பது முன்னணி செய்தி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சில நலிவுற்ற செய்தி சேனல்கள் தங்களுக்கு சாதகமான சூழலாக இதனை கருதுகின்றன.

தேர்தல் நேரமாச்சே..!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கள் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அராசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் சூடுபிடிக்க தொடங்கும். 10நொடி விளம்பரங்களுக்கு எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என்பதை இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் இறுதி செய்வார்கள். தற்போது அந்த ரேட்டிங்கிற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Post

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

Posted by - June 19, 2025 0
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன,…

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

Posted by - November 6, 2025 0
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ்…

மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு?

Posted by - March 26, 2026 0
மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தகவல்கள் பரவிய நிலையில், அடுத்த சில நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *