அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், நான்கு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இது சர்வதேச அளவில் பொருளாதார அளவிலும், வர்த்தக போக்குவரத்திலும் மந்த நிலையை உருவாக்கியது மட்டுமின்றி ஒருசில நாடுகளை கடுமையாக பாதித்தது.