குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

71 0

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணியில் 13 இடங்களில் அதிமுகவும், தலா ஒரு இடத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இவர்களை ஆதரித்து வேளச்சேரி தொகுதியில் பழனிசாமி நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது: வெயில் நேரத்தில் வந்திருக்கிறோம். வருண பகவான் நமக்கு வெயிலைக் குறைத்திருக்கிறார். இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக எனும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் மக்கள் பட்டது துன்பம், வேதனை மட்டும்தான். அதிமுக ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருந்தது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். எங்கே தவறு நடந்தாலும், அதை தடுத்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது.திமுக அரசுக்கு விலை ஏற்றம் பற்றியோ, மக்களை பற்றியோ கவலை இல்லை. எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் தனது குடும்பத்தைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுவார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, பெரும்பாலும் கஞ்சா விற்பனைக்கு திமுக நிர்வாகிகள் துணை நிற்பதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. திமுக ஆட்சி இருக்கும் வரை கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாது.

திமுக ஆட்சியில் கருணாநிதியாக இருந்தாலும், ஸ்டாலினாக இருந்தாலும் குடும்ப ஆட்சி தான். 4 அதிகார மையங்கள். அவர்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டு, மக்களுக்கு துன்பத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஏழை மக்களுக்கான திட்டங்களை கொடுக்க அதிமுக அரசு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றித்தரும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சைதாப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகளில் பழனிசாமி பேசுகையில், ‘‘ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. யார் அந்த சார்? அந்த சார் போய் குற்றவாளி வீட்டில் மூக்குபிடிக்க பிரியாணி சாப்பிட்டார். இப்படி இருந்தால் குற்றச் செயலை எப்படி தடுக்க முடியும்? அதிமுக ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார்? என்று கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகவில் பாதி பேர் அதிமுகதான். 8 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் திமுகவில் ஆளில்லை. யாரையெல்லாம் கட்சியிலிருந்து நீக்கினோமோ, அவர்கள் அங்கே போய் அடைக்கலமாகி மந்திரியாகிவிட்டனர். செல்லாத ஓட்டுக்கு வேல்யூ உண்டா? நாம் செல்லாத ஓட்டு என்று தூக்கியெறிந்தவர்களை அங்கே தூக்கி வைத்துள்ளனர். இப்போது 19 அதிமுகவினர் திமுகவில் எம்எல்ஏ வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஏனென்றால் அங்கே ஆளில்லை. அதனால் அதிமுகவில் ஒதுக்கப்பட்டவர்கள் சீட் வாங்கி நிற்கிறார்கள்’’ என்றார். மாலையில், தியாகராயநகர்,அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொகுதி மறுவரையறையால் பிரச்சினை இல்லை

தி.நகரில் பேசிய பழனிசாமி, ‘‘தொகுதிமறுவரையறையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால், தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. ஆனால், இது தொடர்பாக ஸ்டாலின் அவதூறு பிரச்சாரம் செய்கிறார். திமுக அரசின் தோல்விகளை மறைக்க தொகுதி மறுவரையறையால் ஆபத்து என்கிறார். தமிழகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுங்கள் ஸ்டாலின்’’ என்றார்.

Related Post

பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன?

Posted by - March 13, 2026 0
திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி,…

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்…

Posted by - March 17, 2026 0
“பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக…

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *