மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

342 0

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30-ந்தேதி சுமித்ரி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுமித்ரியின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பாரத் மிஸ்ரா தனது மனைவியின் உடலை பிரீசரில் வைத்து விட்டாராம். இது சுமித்ரியின் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் தனது மைத்துனருக்கும், எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் தான் எனது சகோதரி மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார். அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாரத் மிஸ்ராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமித்ரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரது இறுதி சடங்குக்காக தங்கள் மகன் மும்பையில் இருந்து திரும்ப வேண்டி இருந்ததால் மனைவியின் உடலை பிரீசரில் வைத்து இருந்ததாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சுமித்ரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா உடலை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில நகரங்களில் இதே பாணியில் நடைபெற்ற கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அதே போல இந்த சம்பவத்திலும் சுமித்ரியை அவரது கணவர் கொன்று பிரீசலில் அடைத்து வைத்ததாக புகார் கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

மீண்டும் அமலுக்கு வந்த Containment Zone, lockdown வார்த்தைகள்! கொரோனா- நிபா இடையே இத்தனை ஒற்றுமைகளா?

Posted by - September 15, 2023 0
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது கேட்ட லாக்டவுன், கன்டெய்ன்மென்ட் ஜோன் போன்ற வார்த்தைகள் கேட்ட நிலையில் தற்போது நிபா வைரஸுக்கும் அதே வார்த்தைகள் கேட்கின்றன.…

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…

அகமதாபாத்தில் சோகம்: விபத்தை பார்வையிட்டவர்கள் மீது ஜாகுவார் மோதியதில் 9 பேர் பலி

Posted by - July 20, 2023 0
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இஸ்கான் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இன்று காலை லாரி-ஜீப் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விசாரணை நடத்துவதற்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *