சென்னை: “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினரே இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அலை அலையாக வாக்களித்துள்ளனர். தோல்வி பயத்தால் திமுகவினர் வழக்கம்போல் ரவுடி தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் தவெகவினர் தாக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கில் இரவு ஒரு மணி வரை கள்ள ஓட்டு பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லா இடத்திலும் அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியோடு திமுகவினருக்கு துணை போகின்றனர்.