புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ந்தேதி 324 ஆக இருந்தது
நேற்று முன்தினம் 281, நேற்று 266 ஆக குறைந்திருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் 300-ஐ தாண்டி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 88 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 220 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி 3,076 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 106 அதிகமாகும். தொற்று பாதிப்பால் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,775 ஆக நீடிக்கிறது.