வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில், உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வெப்பநிலையினை தாக்கு பிடிக்கும் வகையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பால் சர்பத் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – அரை லிட்டர்.
பாதாம் பிசின் – 5 துண்டுகள்.
பாதாம் பருப்பு – 15
சர்க்கரை – 10 ஸ்பூன்.
ஆப்பிள் – 1.
ஸ்ட்ராபெரி – 4.
ஏலக்காய் – 3
செய்முறை :
பாதாம் பால் சர்பத் செய்ய, முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கோப்பையில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் எவ்வளவு நன்றாக ஊறுகிறதோ, சர்பத் அவ்வளவு நன்றாக இருக்கும்.
சர்பத் செய்ய, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து, அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கோப்பை தண்ணீரை சூடு படுத்திக்கொள்ளவும்.
சிறய பாத்திரத்தில் வைத்த தண்ணீர் கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, இதில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற விடுங்கள். 10 நிமிடங்களுக்கு பின்னர் இந்த பருப்பினை தனியே எடுக்க பருப்பின் தோல் நீங்கி தனியே வரும்.