கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – ஒரு கப்,
கொத்தமல்லி, புதினா – தலா ஒரு கப்,
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 5,
பட்டை – ஒரு துண்டு,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 1,
உருளைக்கிழங்கு – 1,
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு 5 நிமிடம் வதக்கி, ஆற வைத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
இரண்டும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்…
கமகம கிரீன் பிரியாணி ரெடி!