“கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன்…” – மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு..!

252 0

குண்டு வைத்து கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல, குடிக்க வைத்து கொள்வதும் இனப்படுகொலைதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.

சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப்பில் இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக 60 ஆம் ஆண்டு தேசிய கடலோர தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

அப்போது மேடையில் பேசிய சீமான்,  “பூமியை மண் என்று பார்க்காமல் தாயின் மடி என பார்க்க வேண்டும். பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல அனைத்து உயிரிகளுக்கும் சொந்தமானது” என தெரிவித்தார்.

மேலும், கடைசியாக வந்த இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல கடைசியாக வந்த மனிதன் ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றான். அனைத்தையும் அழிக்க பார்க்கின்றான். அதை நாம் விடமாட்டோம். மண்புழு செய்ததை போல் எந்த உயிரும் மண்ணிற்கு பயனை சேர்க்கவில்லை என்று கூறினார்.

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ்  உலகத்தை சிதைந்து விட்டது. கடல் தற்போது குப்பை மேடாக உள்ளது. அனைத்து கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது.  திருவள்ளுவருக்கும் சிலை கடலில் உள்ளதே என்கிறார்கள். இயற்கை பாறை வேறு செயற்கையாக உருவாக்கும் பாறை வேறு. செயற்கையாக உருவாக்கும் பாறைகளால் பல லட்சம் கடல் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். இப்போதும் சொல்கிறேன் கடலில் பேனா வைத்தால் நிச்சயம் உடைப்பேன் என  பேசியுள்ளார்.

Related Post

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

Posted by - November 17, 2025 0
சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது…

விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்… கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக

Posted by - November 27, 2025 0
#Sengottaiyan அதிமுக மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார்.…

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான்

Posted by - February 7, 2024 0
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை – சீமான் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்த அனைவருக்கும்…

பி.டி.ஆர் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்… சுதந்திரமான சோதனை செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி

Posted by - April 23, 2023 0
ஆடியோ சர்ச்சை குறித்த பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *